மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை, மாநகராட்சி ஆணையர்கள் ஒருங்கிணைப்புக்கு குழுவின் உறுப்பினராக செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழாக்கமிட்டியினர் நடத்தவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.